பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
01:02
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கிமேற்கொண்ட நடவடிக்கைபோன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
குறிப்பாக, "நிப்டி', 1.25 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தது.ஜெர்மனியின் முதலீட்டாளர்கள் நம்பிக்கை மற்றும் அமெரிக்காவின் தொழில்துறை உற்பத்தி குறித்த, புள்ளி விவரங்களின் எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கமும் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறைகளைச்சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்குதேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 183.25 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,851.23 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,890.63 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,649.58 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐபேங்க், எல் அண்டு டி, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஐ.டி.சி., பார்தி ஏர்டெல், எச்.யூ.எல்., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 75.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,955.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,966.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,910.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|