பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
01:06
ஜெய்ப்பூர்:"நம் நாட்டு மக்களுக்கும், தங்கத்திற்கும் இடையே, நீண்ட கால பந்தம் உள்ளதால், தங்கம் இறக்குமதியை முழுவதுமாக தடை செய்ய முடியாது' என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பற்றாக்குறை:ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம்பேசியதாவது:தங்கத்தை இறக்குமதி செய்வதால், கிட்டத்தட்ட, 5,000கோடி டாலர் மதிப்பிற்கான செலாவணி வெளியேறுகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு, தங்கம் இறக்குமதி தான் முக்கிய காரணம். ஆனால், அதன் இறக்குமதியை முழுமையாக தடுக்க முடியாது.
அதேசமயம், தங்கம் மீதானமோகத்தை நாம் குறைத்துக் கொள்ளமுடியுமே? உதாரணமாக, 20 கிராம் வாங்க நினைத்தால், 10 கிராம் வாங்கலாமே?மக்கள், சில காலத்திற்கு தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சந்தைதான் தீர்மானிக்கிறது. ரூபாய் வெளி மதிப்பு, நாம் எந்த அளவிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டுகிறோம் அல்லது செலவழிக்கிறோம் என்பதை சார்ந்து உள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில், அதிக அளவிலான ஊக வணிகத்தை கட்டுப்படுத்தி, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தை குறைத்து, ஒரு நிலைக்கு கொண்டு வரும்நோக்கில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.இதை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள காலாண்டு நிதிக் கொள்கையில், வட்டி விகித மாற்றத்திற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைக்காது என, நம்புகிறேன்.
பொருளாதார வளர்ச்சி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சென்ற நிதியாண்டை விட, 1 சதவீதம் அதிகரித்து, 6 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. எனினும், இது திருப்திகரமான வளர்ச்சி என்று கூற முடியாது.
ஆகஸ்ட் 5ம்தேதி துவங்கும், பார்லிமென்ட் மழைக்கால கூட்ட தொடரில், உணவு பாதுகாப்பு அவசர சட்டம் தாக்கல் செய்யப்படும். இதற்கு, 6 வாரங்களுக்குள், பார்லிமென்டில் ஒப்புதல் பெறவேண்டும். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|