காய்கறிகள் விலை குறையும்: சரத் பவார்காய்கறிகள் விலை குறையும்: சரத் பவார் ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
தங்கம் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது: ப.சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
01:06

ஜெய்ப்பூர்:"நம் நாட்டு மக்களுக்கும், தங்கத்திற்கும் இடையே, நீண்ட கால பந்தம் உள்ளதால், தங்கம் இறக்குமதியை முழுவதுமாக தடை செய்ய முடியாது' என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பற்றாக்குறை:ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம்பேசியதாவது:தங்கத்தை இறக்குமதி செய்வதால், கிட்டத்தட்ட, 5,000கோடி டாலர் மதிப்பிற்கான செலாவணி வெளியேறுகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு, தங்கம் இறக்குமதி தான் முக்கிய காரணம். ஆனால், அதன் இறக்குமதியை முழுமையாக தடுக்க முடியாது.
அதேசமயம், தங்கம் மீதானமோகத்தை நாம் குறைத்துக் கொள்ளமுடியுமே? உதாரணமாக, 20 கிராம் வாங்க நினைத்தால், 10 கிராம் வாங்கலாமே?மக்கள், சில காலத்திற்கு தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சந்தைதான் தீர்மானிக்கிறது. ரூபாய் வெளி மதிப்பு, நாம் எந்த அளவிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டுகிறோம் அல்லது செலவழிக்கிறோம் என்பதை சார்ந்து உள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில், அதிக அளவிலான ஊக வணிகத்தை கட்டுப்படுத்தி, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தை குறைத்து, ஒரு நிலைக்கு கொண்டு வரும்நோக்கில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.இதை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள காலாண்டு நிதிக் கொள்கையில், வட்டி விகித மாற்றத்திற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைக்காது என, நம்புகிறேன்.
பொருளாதார வளர்ச்சி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சென்ற நிதியாண்டை விட, 1 சதவீதம் அதிகரித்து, 6 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. எனினும், இது திருப்திகரமான வளர்ச்சி என்று கூற முடியாது.
ஆகஸ்ட் 5ம்தேதி துவங்கும், பார்லிமென்ட் மழைக்கால கூட்ட தொடரில், உணவு பாதுகாப்பு அவசர சட்டம் தாக்கல் செய்யப்படும். இதற்கு, 6 வாரங்களுக்குள், பார்லிமென்டில் ஒப்புதல் பெறவேண்டும். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)