தங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்புதங்கம் விலை உயர்வு - சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ... தொழில் துறையினர் குறை தீர்க்க மத்திய அரசு ஏற்பாடு தொழில் துறையினர் குறை தீர்க்க மத்திய அரசு ஏற்பாடு ...
முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
13:50

புதுடில்லி : முக்கியமான சில தொழில்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டிற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அந்நிய முதலீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விதிகளை தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் தளர்த்தி உள்ளது. முதலீடுகளை கவருவதற்காகவும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச் செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது தொலைத்தொடர்பு துறையில் அந்நிய முதலீட்டிற்கான அளவு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 பில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று மற்றொரு முக்கிய துறையான இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பெட்ரோலிய துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரையிலும், பாதுகாப்பு துறையில் 26 சதவீதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்படுவதால் மாநிலங்களில் கலை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை அளிக்க உள்ளது. மத்திய அரசு இந்த முடிவு தொழில் துறை நிறுவனங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

பல்நோக்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் உச்சவரம்பு 51 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என செப்டம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து மத்திய அரசு பெரும்பான்மையை இழந்து மைனாட்டி அரசு ஆனது. இதனால் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசு, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அரவிந்த் மாயாராமின் பரிந்துரைப்படி அந்நிய நேரடி முதலீட்டு உச்சரவரம்பை 74 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது, சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு அதிகரிக்கக் காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடி அந்நிய முதலீட்டை பல துறைகளிலும் விரிவுபடுத்தியதற்கும், அதற்கான உச்சவரம்பை அதிகப்படுத்தவும் மம்தா பானர்ஜியும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)