முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதிமுக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்த அரசு அனுமதி ... ரயில்வே சரக்கு வருவாய் 8.41 சதவீதம் அதிகரிப்பு ரயில்வே சரக்கு வருவாய் 8.41 சதவீதம் அதிகரிப்பு ...
தொழில் துறையினர் குறை தீர்க்க மத்திய அரசு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
23:41

ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் துறையினருக்கும், கலால் வரி மற்றும் சுங்க வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், பிரச்னைகளை தீர்க்க, பிரத்யேக ஏற்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கலால் வரி:சுங்க வரி மற்றும் கலால் வரி இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு பின், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நிருபர்களிடம் கூறியதாவது:சுங்கவரி மற்றும் கலால் வரி வசூலிப்பதில், மிகுந்த முனைப்புடன் செயலாற்றும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுங்க வரி, சேவை மற்றும் கலால் வரி வாயிலாக, நடப்பு நிதியாண்டில், 5.65 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது, கடந்த ஆண்டின் இலக்கை விட, 19 சதவீதம் அதிகம். இருப்பினும், திட்டமிட்டபடி அரசு தன் இலக்கை எட்ட முடியும் என்ற, நம்பிக்கை உள்ளது. கடந்த நிதி ஆண்டில், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 6 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சுங்க வரி மற்றும் கலால் வரி வசூலிப்பில், திட்டமிட்ட இலக்கை எட்ட முடியும்.
நாட்டிலுள்ள, முக்கிய துறைமுகங்களில், 24 மணி நேரமும் சுங்க வரிச்சோதனை நடத்தும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தொழில் துறையில், 1.20 லட்சம் பேர், கலால் வரி செலுத்துகின்றனர். சேவை வரி செலுத்தாதவர்களுக்கு, சில வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன.அதன் படி, அவர்கள், வரும், 2013ம் ஆண்டுக்குள், சேவை வரியை செலுத்தியாக வேண்டும். அவ்வாறு செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.எனவே, கால தாமதம் செய்யாமல், உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சேவை வரி செலுத்துவது நல்லது. எக்காரணம் கொண்டும், இந்த வாய்ப்பு, நீட்டிக்கப்பட மாட்டாது.
சேவை வரி:பட்ஜெட் தயாரிப்புக்கு முன், தொழில் துறையினர் சந்திப்பு நடைபெறும். அப்போது, கலால் வரி மற்றும் சேவை வரி தொடர்பாக, தொழில் துறையினருக்கு, நிறைய சிரமங்களும் சந்தேகங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, அதற்கென ஒரு புதிய செயல்திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட தொழில் துறையினரும், தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, புது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரச்னை:இதன் மூலம், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை மதியம், மத்திய நிதித் துறையின் உயர் அதிகாரி, பார்த்தசாரதி ஷோம், தொழில்துறையினரை சந்திப்பார். அவரிடம், தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு கொள்ளலாம். தனி நபர் பிரச்னைகளுக்கு, இந்த ஏற்பாடு பொருந்தாது.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)