பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:42
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் இரும்புத் தாது இறக்குமதி, 78 சதவீதம் சரிவுஅடைந்துள்ளது. உள் நாட்டில் இரும்புத் தாது உற்பத்தி அதிகரித்ததால், அதன் இறக்குமதி சரிவடைந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், இந்தியா, 1.85 லட்சம் டன் இரும்புத் தாதுவை இறக்குமதி செய்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 8.26 லட்சம் டன்னாக இருந்தது.இந்தியா, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்து வந்தது.
சுரங்க முறைகேடு தொடர்பான வழக்குகளால், இரும்புத் தாது உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனினும், சில நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, இரும்புத் தாது உற்பத்தி அதிகரித்து உள்ளது.அதே சமயம், இரும்புத் தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் விளைவாக, இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்து, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உயர்ந்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|