பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:43
புதுடில்லி:நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், ரயில்வேயின் சரக்கு வருவாய், 22,796 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 21,028 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், ரயில்வேயின் சரக்கு வருவாய், 8.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்கின் அளவு, 4.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24.48 கோடி டன்னிலிருந்து, 25. 68 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், சரக்குகள் கையாண்டதன் வாயிலாக, இந்திய ரயில்வே ஒட்டு மொத்த அளவில், 7,471 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
இதில், 4.23 கோடி டன் நிலக்கரி ஏற்றி சென்றதன் வாயிலாக, 3,361 கோடி ரூபாயும், 98.20 லட்சம் டன் இரும்புத்தாது ஏற்றிச் சென்றதன் மூலம், 669 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது.இவை தவிர, சிமென்ட், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றை கையாண்டதன் வாயிலாகவும், ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு வருவாய் கிட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|