பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
23:49
புதுடில்லி:ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., - ஜூன்), 1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 28.40 லட்சம் டன்னாக இருந்தது.உள்நாட்டில் தொழில்துறை நடவடிக்கைகள் சுணக்கம் கண்டுள்ள போதிலும், இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 2 சதவீதம் சரிவடைந்து, 22.30 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது.எனினும், கட்டுமானம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளுக்கு தேவையான, இந்நிறுவனத்தின் உருக்கு பொருட்கள் உற்பத்தி, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.50 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி, 85.10 லட்சம் டன்னாக இருந்தது என, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|