பதிவு செய்த நாள்
18 ஜூலை2013
00:00
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், ஜி.எஸ்.எம்., அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 0.54 சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.11 கோடியாக அதிகரித்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம்: இது, சென்ற மே மாதத்தில், 66.76 கோடியாக இருந்தது. பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லூர் உள்ளிட்ட நிறுவனங்கள், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், 35.70 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்து கொண்டுள்ளன.இதையடுத்து, நாட்டின் ஒட்டு மொத்த அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67.11 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
வாடிக்கையாளர்களை அதிகளவில் கொண்டுள்ளதில், உத்தரபிரதேசம்(கிழக்கு) முதலிடத்தை பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் மட்டும், 6 கோடிக்கும் அதிகமான, அலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.நடப்பாண்டு ஜூன் மாதத்தில், பார்தி ஏர்டெல், 12.60 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து, முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
வோடபோன்:இதையடுத்து, ஐடியா (12.10 லட்சம் வாடிக்கையாளர்கள்), ஏர்செல் (6.10 லட்சம்), வோடபோன் (3.50 லட்சம்), யூனிநார் (3 லட்சம்) மற்றும் வீடியோகான் (1.30 லட்சம் வாடிக்கையாளர்கள்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த, பீ.எஸ். என்.எல்., மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த லூப் ஆகிய நிறுவனங்கள், மதிப்பீட்டு மாதத்தில், புதிய வாடிக்கையாளர்கள் எவரையும் ஈர்க்கவில்லை. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான, எம்.டி.என்,எல்.,-ல், 90 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
முதலிடம்:ஏர்டெல் நிறுவனம், 19.09 கோடி அலைபேசி வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, வோடபோன் நிறுவனம் (15.50 கோடி வாடிக்கையாளர்கள்), ஐடியா (12.50 கோடி), பீ.எஸ்.என்.எல்., (9.72 கோடி), ஏர்செல் (6.10 கோடி), யூனிநார் (3.23 கோடி), எம்.டி.என்.எல்.,(43.40 லட்சம்), லூப் (30 லட்சம்) மற்றும் வீடியோகான் (24.20 லட்சம் வாடிக்கையாளர்கள்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|