பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
01:45
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து உள்ளதால், முந்திரி, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
முந்திரி கொட்டை:கடந்த ஒரு மாத காலத்தில், நாட்டின் முக்கிய சந்தைகளில், முந்திரி பருப்பின் விலை, 17 சதவீத அளவிற்கும், பாதாம் விலை, 11 சதவீத அளவிற்கும் அதிகரித்துள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில், முந்திரி கொட்டைக்கான தேவை, 7 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், 50 சதவீதம் முந்திரி கொட்டைகள், இறக்குமதி செய்யப்படுகின்றன.
பாதாம் பருப்பிற்கான தேவை, 70 ஆயிரம்டன் என்ற அளவில் உள்ளது. இது, முற்றிலுமாக, இறக்குமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடுமை யாக சரிவடைந்துள்ளதால், இறக்குமதி செலவினம் மிகவும் அதிகரித்து உள்ளது.
ஏற்றுமதி:இதையடுத்து, உள்நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில், இவற்றின் விலை, படிப்படியாக அதிகரித்து வருகின்றன.உள்நாட்டு தேவை போக, சராசரியாக, ஆண்டுக்கு, 7,500 டன் முந்திரி ஏற்றுமதியாகிறது. சர்வதேச சந்தையில், ஒரு டன் முந்திரி கொட்டையின் விலை, 1,100 டாலரிலிருந்து, 800 டாலராக சரிவுஅடைந்துள்ளது.
ஆனால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பின் சரிவால், உள்நாட்டு சந்தையில், இதன் விலை உயர்ந்துள்ளதாக, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் கிரிதர் பிரபு தெரிவித்து உள்ளார்.
மங்களூர் சந்தையில், கடந்த ஒருமாத காலத்தில், முந்திரியின்விலை, 476 ரூபாயிலிருந்து, 529 ரூபாயாக (ஆலை விலை) அதிகரித்துள்ளது. ஏற்றுமதி தரம் வாய்ந்த மங்களூர், "டபிள்யூ 320' ரக முந்திரியின் விலை, 8.3 சதவீதம் அதிகரித்து, 423 ரூபாயிலிருந்து, 458 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா:டில்லி மற்றும் சண்டிகார் மொத்த விலை சந்தையில், பாதாம் விலை, கடந்த ஒரு மாத காலத்தில், 17 சதவீதம் அதிகரித்து, 470ல் இருந்து, 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பை சந்தையில் இதன் விலை, 505ல்இருந்து, 590 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ முந்திரி, 750-800 ரூபாய்க்கும், பாதாம், 650-800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.சர்வதேச அளவில், அமெரிக்காவில் பாதாம் அதிகளவில் உற்பத்தியாகிறது. ஆனால், கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், இதன் உற்பத்தி மிகவும் சரிவடைந்து உள்ளது. இதையடுத்து, பாதாம் அளிப்பு குறைந்து இதன் விலை அதிகரித்துள்ளது.
தீபாவளி :இந்தியாவில், வரும் தீபாவளி பண்டிகையின் போது, பாதாம் விலை, 600 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும், மங்களூரைச் சேர்ந்த போரா ”ரேந்திரா காமத் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ராகுல் காமத் தெரிவித்தார்.இந்நிலையில், தற்போது, ரமலான் நோன்பு காலம் என்பதால், சில்லரை விற்பனையில் உலர் பழங்களின் விலை அதிகரித்துள்ளது என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|