பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
01:50
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று, மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரம் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், "நிப்டி' சரிவுடனும், "சென்செக்ஸ்' சற்று உயர்வுடனும் முடிவடைந்தன.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குசந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. அதேசமயம், பொறியியல், வங்கி, மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.44 புள்ளிகள் உயர்ந்து, 20,149.85 புள்ளிகளில் நிலை பெற்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 16 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், பி.எச்.இ.எல்., சன் பார்மா, ஸ்டெர்லைட் இந்தியா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 8.85 புள்ளிகள் சரிவடைந்து, 6,029.20 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|