விமான பயணிகள் எண்ணிக்கை 3.10 கோடிவிமான பயணிகள் எண்ணிக்கை 3.10 கோடி ... கரீப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு கரீப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' உயர்வு; "நிப்டி' சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
01:50

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று, மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரம் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், "நிப்டி' சரிவுடனும், "சென்செக்ஸ்' சற்று உயர்வுடனும் முடிவடைந்தன.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குசந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. அதேசமயம், பொறியியல், வங்கி, மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.44 புள்ளிகள் உயர்ந்து, 20,149.85 புள்ளிகளில் நிலை பெற்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 16 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், பி.எச்.இ.எல்., சன் பார்மா, ஸ்டெர்லைட் இந்தியா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 8.85 புள்ளிகள் சரிவடைந்து, 6,029.20 புள்ளிகளில் நிலை கொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)