பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
01:51
புதுடில்லி:நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன் -அக்.,), ஜூலை 19ம் தேதி நிலவரப்படி, பயிரிடப்பட்டுள்ள உணவு தானியங்களின் பரப்பளவு, 620.20 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது.இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 506.21 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதே காலத்தில், நெல் சாகுபடி பரப்பளவு, 139.42 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 154.85 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பளவு, 31.62 லட்சம் ஹெக்டேராகவும் ( 20.54), தானியங்களின் பரப்பளவு, 126.64 லட்சம் ஹெக்டேரா கவும் (95.43), எண்ணெய் வித்துக்கள், 149.82 லட்சம் ஹெக்டேராகவும் (108.81) அதிகரித்துள்ளது.
பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு, 100.55 லட்சம் ஹெக்டேராகவும் ( 83.74), சணல் பரப்பளவு 8.27 லட்சம் ஹெக்டேராகவும் (8.22) உயர்ந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவு, 50.04 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 48.45 லட்சம் ஹெக்டேராக குறைந்து உள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|