பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
14:16
ஆட்டோமொபைல் என்ஜின்கள் கடந்த 150 ஆண்டுகளாக பலவிதமான மாறுதல்களை சந்தித்து இன்று மிகச்சிறப்பான செயல்திறனுடன் இயங்கிவருகிறது. இன்றைய இன்டர்னல் கம்பஷன் என்ஜின்கள் அதிக ஆற்றலுடனும், அமைதியாகவும், நீண்ட காலம் உழைக்கக்கூடியதாகவும் மிகக் குறைவான மாசை வெளிப்படுத்தக் கூடியதாகவும் எரிபொருள் சிக்கனம் கொடுப்பதாகவும் இருப்பதற்கு ஆட்டோமொபைல் பொறியாளர்களின் இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று கூற வேண்டும். என்ஜின் தொழில்நுட்ப புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி படிப்படியாக அதன் வளர்ச்சி தேவைக்கேற்ப மாறி வந்துள்ளது என்பதை கீழ்வருமாறு பார்க்கலாம்.
4 ஸ்ட்ரோக் என்ஜின்: இன்டர்னல் கம்பஷன் என்ஜின்களில் முதலில் ஏற்பட்ட முன்னேற்றம் இதுவே. 4ஸ்ட்ரோக் என்ஜின் எரிபொருளை இழுப்பது, அதை எரிப்பது சக்தியை வெளியிடுவது, கழிவை வெளிப்படுத்துவது என்ற நான்கு வேலைகளை இதன் பிஸ்டன் இரண்டிரண்டு முறை மேலும் கீழும் ஏறி இறங்குவதின் மூலம் செய்கிறது. இதனால் தான் 2 ஸ்ட்ரோக் என்ஜின்களை விட சிறப்பான செயல்திறன் இதில் கிடைக்கிறது. எரிபொருள் சிக்கனம், நீடித்த உழைப்பு, அதிக சக்தி மற்றும் இழுக்கும் விசை இவற்றுடன் மாசுக் கட்டுப்பாடும் ஸ்ட்ரோக் என்ஜின்களில் கிடைக்கிறது.
இன்டக்ஷன் முறைகள் (டர்போசார்ஜர், சூப்பர் சார்ஜர்) ஒரு என்ஜின் செயல்பட எரிபொருள், காற்று மற்றும் இக்னீஷன் (எரிக்கும் ஆற்றல்) என்ற மூன்று முக்கிய விஷயங்கள் தேவைப்படுகிறது. இதில் என்ஜின் பிஸ்டனிற்குள் அதிகப்படியான காற்றை அனுப்பினால் அதிக சக்தியை கிடைக்கச் செய்யலாம். எனவே வெளியிலிருந்து பெறும் காற்றை நன்கு அழுத்தி அதை கம்பஷன் செம்பருக்குள் அனுப்பும் வேலையை செய்வதுதான் டர்போ மற்றும் சூப்பர் சார்ஜர்கள். ஃபோர்ஸ்ட் இன்டக்ஷன் எனும் இம்முறையை செய்யும் சார்ஜர்கள் முன்பெல்லாம் விமானங்களில் மட்டும் இருந்தன. 1960 ஆம் ஆண்டிற்கு மேல்தான் இவை கார் என்ஜின்களில் பொருத்தப்பட்டன. இதனால் குறைந்த எரிபொருளில் அதிகப்படியான ஆற்றல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்யூவல் இன்ஜெக்ஷன்: பொதுவாக என்ஜினின் கம்பஷன் சேம்பருக்குள் எரிபொருளையும் காற்றையும் சரி விகிதத்தில் கலந்து அனுப்பும் வேலையை கார்ப்பரேட்டர் செய்யும், ஆனால் ப்யூவல் மற்றும் போர்ஸ்ட் இன்ஜெக்ஷன் முறையில் கார்ப்பரேட்டர் தேவையே இல்லாமல் போய்விட்டது. ப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை மெல்லிய ஸ்ப்ரே மூலம் பீய்ச்சி அடிக்க, அங்கு காற்றும் அழுத்தக் காற்றாய் நிரம்பியிருக்க காற்றும் எரிபொருளும் சீராக கலந்து வால்வுகள் அனுமதியுடன் சிலிண்டருக்குள் அனுப்பப்படும். இந்த ப்யூவல் இன்ஜெக்ஷன் முறையை இசியு (எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்) ஆகும். கம்ப்யூட்டர் மூலம் ப்யூவல் இன்ஜெக்டர் கட்டுப்படுத்தப்படுவதால் மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டு தேவையான எரிபொருள் வீணாவது அதிகளவில் குறைக்கப்படுகிறது. இந்நிலையில் இனி கார்ப்பரேட்டர் மீண்டும் உபயோகப்படுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|