டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் ... அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.15.97 லட்சம் கோடியாக அதிகரிப்பு அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.15.97 லட்சம் கோடியாக அதிகரிப்பு ...
சோயா சாகுபடி பரப்பளவில் புதிய சாதனை:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2013
03:12

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (ஜூன்-அக்.,), தற்போதைய நிலவரப்படி, உள்நாட்டில், சோயா பயிரிடும் பரப்பளவு, சாதனை அளவாக, 110 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது.இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 106 லட்சம் ஹெக்டேராக இருந்தது. முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்றாக விளங்கும், சோயா மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களுக்கான @தவை அதிகரித்து வருகிறது.
மத்திய பிரதேசம்:இதனால், அதிக ஆதாயம் தரும் சோயா சாகுபடியில், விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் சோயா உற்பத்தியில் மத்தியபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், நடப்பு கரீப் பருவத்தில், சோயாசாகுபடி பரப்பளவு, 58.80 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
சோயா உற்பத்தியில், மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு, நடப்பு கரீப் பருவத்தில், 34.05 லட்சம் ஹெக்டேரில் சோயா பயிரிடப்பட்டுள்ளது.சோயா பயரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், அதன் உற்பத்தியில் புதிய இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கடலை:மற்றொரு எண்ணெய் வித்தான, நிலக்கடலை பயிரிடும் பரப்பளவும் அதிகரித்துள்ளது. குஜராத்தில், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகரித்து, 6.66 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 15.66 லட்சம் ஹெக்@டராக உயர்ந்துள்ளது.சோயா மற்றும் நிலக்கடலையை தொடர்ந்து, நெல் சாகுபடி பரப்பளவும் கணிசமாக அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், நெல் பயிரிடும் பரப்பளவு, 11 சதவீதம் உயர்ந்து, 139.42 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 154.85 லட்சம் ஹெக்@டராக அதிகரித்துள்ளது.நடப்பாண்டில், இதுவரை, நாட்டின் முக்கிய பகுதிகளில், போதுமான அளவிற்கு மழை பொழிந்துள்ளது. நடப்பு பருவத்தின் துவக்கத்தில் இருந்து தற்போது வரை, 15 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின், 36 துணை கோட்டங்களில், 19 கோட்டங்களில், அளவிற்கு அதிகமாகவும், 11ல், வழக்கமான மழைப் பொழிவும் காணப்பட்டது. அதே சமயம், வட கிழக்கு பிராந்தியத்தில் அடங்கியுள்ள, ஆறு துணை கோட்டங்களில், மழைப் பொழிவு பற்றாக்குறைஆக உள்ளது.எண்ணெய் வித்துக்கள்:எனினும், வரும் பருவத்திலும் நல்ல அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள், நெல் ஆகியவை போன்று, நாட்டின் பருப்பு உற்பத்தியும், சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில், பயிரிடப்பட்டுள்ள மொத்த பருப்பு வகைகளில், துவரம் பருப்பின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை, பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு, முறையே, 14.39, 9.14 மற்றும் 6.02 லட்சம் ஹெக்டேராக உள்ளது.மத்திய பிர‌தேசம் மற்றும் ராஜஸ்தானில், மக்காச்சோளம் பயிரிடும் பரப்பளவு, 9 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாக உள்ளது. கர்நாடகத்தில் மட்டும், 8.47 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் பருத்தி பயிரிடும் பரப்பளவு, 100 லட்சம் ஹெக்@டரை தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிரா, 36.34 லட்சம் ஹெக்@டருடன் முதலிடத்திலும், 24.57 லட்சம் ஹெக்டேருடன், குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆந்திரா:ஆந்திராவில், பருத்தி பயிரிடும் பரப்பளவு, கடந்த ஆண்டு, இதே காலத்தை விட, கணிசமாக உயர்ந்து, 15.20 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.அண்மையில், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், "நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, கடந்த இரண்டு ஆண்டு காலசாதனையை முறியடிக்கும்' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)