பதிவு செய்த நாள்
21 ஜூலை2013
03:16
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 2 கோடி டாலர் (114 கோடி ரூபாய்) அதிகரித்து, 28,019 கோடி டாலராக (15.97 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு:இது, இதற்கு முந்தைய வாரத்தில், 448 @காடி டாலர் (25,536 @காடி ரூபாய்) சரிவடைந்து, 28,017 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து மூன்று வாரங்களாக சரிவடைந்து வந்த, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் சற்று உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 4 கோடி டாலர் உயர்ந்து, 25,214 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எனினும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை.
சர்வதேச நிதியம்:மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர் மதிப்பு, 67 லட்சம் டாலர் உயர்ந்து, 433 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம், நம்நாடு சர்வதேச நிதியத்தில் வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.91 கோடி டாலர் சரிவுஅடைந்து, 216 @காடி டாலராக குறைந்து உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டுள்ளதாக, ரிசர்வ் வங்கியின், புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|