பதிவு செய்த நாள்
21 ஜூலை2013
03:25
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 56 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளதை அடுத்து, கடந்த வாரம் முழுவதும், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதையடுத்தும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதையடுத்தும், மத்திய அரசு தங்கம் இறக்குமதி மீது கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால், இதன் இறக்குமதி குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததை அடுத்து கடந்த மாதம், உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,516 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,128 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 2,519 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 20,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 40 ரூபாய் உயர்ந்து, 26,945 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40, 275 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்கட்கிழமை, ஒரு கிராம் தங்கம், 2,512 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,096 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாயும், சவரனுக்கு, 56 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|