"பீ.எம்.டபிள்யூ 1' போட்டி: சச்சினுடன் 8 பேர் பயணம்"பீ.எம்.டபிள்யூ 1' போட்டி: சச்சினுடன் 8 பேர் பயணம் ... இளைஞர்கள் விரும்பும் "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்கள்:அதிக விலையா... கவலையில்லை... இளைஞர்கள் விரும்பும் "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்கள்:அதிக விலையா... ... ...
வர்த்தகம் » ஜவுளி
இந்திய ஆடைகள் சந்தை மதிப்பு 20 ஆயிரம் கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
00:51

புதுடில்லி:வரும் 2025ம் ஆண்டில், இந்திய ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, தற்போதைய நிலையிலிருந்து, நான்கு மடங்கு அதிகரித்து, 20 ஆயிரம் கோடி டாலராக, வளர்ச்சி காணும் என, வசீர் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.உலகளவில், சீனா மற்றும் இந்தியாவின் ஆடைகள் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட, இவ்விரு நாடுகளின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது என, ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவின் ஆடைகள் துறையின் சந்தை மதிப்பு, 4,500 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில், தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவில் ஆடைகளுக்கான தேவை நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள், இத்துறையில், இரட்டை இலக்க அளவில் வளர்ச்சி கண்டு வருகின்றன. உலகளவில், ஆடைகள் சந்தை மதிப்பில், இவ்விரு நாடுகளின் பங்களிப்பு, 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஆடைகள் ஏற்றுமதி அதிகரித்து வரும் அதே நிலையில், உள்நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, ஆடைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது என, வசீர் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார்.தற்போது, சர்வதேச அளவில், ஆடைகளுக்கான சந்தை மதிப்பு, 1.10 லட்சம் கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2025ம்ஆண்டில், 2.10 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். தற்போதைய நிலையில், சீனாவின் ஆடைகள் ஏற்றுமதி சற்று குறைந்து உள்ளது.
இது, இந்திய ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை நன்கு உள்ளதால், இந்திய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும், இத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நீண்ட கால அடிப்படையில், இத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு நல்ல அளவில் ஆதாயம் கிடைக்கும் என, அகர்வால் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)