"பீ.எம்.டபிள்யூ 1' போட்டி: சச்சினுடன் 8 பேர் பயணம்"பீ.எம்.டபிள்யூ 1' போட்டி: சச்சினுடன் 8 பேர் பயணம் ... விலை சரிவடைந்ததால்குன்னூரில் தேயிலை தேக்கம் விலை சரிவடைந்ததால்குன்னூரில் தேயிலை தேக்கம் ...
இளைஞர்கள் விரும்பும் "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்கள்:அதிக விலையா... கவலையில்லை...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
01:22

இன்றைய இளைஞர்கள், விலையை பொருட்படுத்தாமல், கவர்ச்சிகரமான "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களை வாங்கி வருகின்றனர்.அவர்களின் ரசனைக்கேற்ப, பல நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உயர் வகை மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த துவங்கிஉள்ளன.இதன்படி, சென்னையை சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், ஜெர்மனியின் பீ.எம்.டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்துடன் இணைந்து, "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.
எரிபொருள் சிக்கனம்:இதன் மூலம், வரும் 2015ம் ஆண்டு முதல், உலகப் புகழ் பெற்ற பீ.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள், இந்திய சாலைகளில் விரைவதை காணலாம்.500 சி.சி.,க்கு குறைவான என்ஜின் திறனுடன் வெளி வர உள்ள இந்த மோட்டார்சைக்கிள்களின் விலை, 2 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என, தெரிகிறது.விலை குறைந்த, சிக்கனமான எரிபொருள் செலவில் அதிக மைலேஜ் தரக்கூடிய, 75 சி.சி., - 125 சி.சி., என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு, இன்றைய இளைஞர்களிடம் வரவேற்பு குறைந்து வருகிறது.அதற்கு மேற்பட்ட திறனில், அதிக விலையில், குறைந்த மைலேஜ் தரக்கூடியவையாக இருந்தாலும், கவர்ச்சிகரமான, சர்வதேச பிராண்டுடன் சந்தைக்கு வரும் மோட்டார் சைக்கிள்களையே அவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
சந்தையில் தீவிரம்:அதனால், லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது.இதை கருத்தில் கொண்டு, யமஹா, ”‹கி, ஹியோசங், காவாசாகி, ஹஸ்க்வர்னா, கே.டி.எம்., பியாஜ்ஜியோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டிரியம்ப் போன்ற நிறுவனங்கள், "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களை சந்தைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
நிறுவனங்கள் ஆர்வம்:கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம், உயர்வகை மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் தனிக்காட்டு ராஜாவாக, 95 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது.இந்நிலையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த 2011ம் ஆண்டு, உயர் பிரிவில், "சி.பீ.ஆர் 250 ஆர்' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாயின.
இதைத் தொடர்ந்து, யமஹா, ”‹கி நிறுவனங்களும், 250 சி.சி. மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.அறிமுகம்:காவாசாகி நிறுவனத்தின், 300 மற்றும் 650 சி.சி. மோட்டார் சைக்கிள்களை, இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், கே.டி.எம். நிறுவனத்துடன் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, "டியூக் 200' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது.அண்மையில்,18 லட்சம் ரூபாய் விலை கொண்ட, "டியூக் 390' மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"இதற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான இரண்டு வாரங்களில், 1,000 வாகனங்கள் வேண்டி முன்பதிவு செய்யப்பட்டுள்ளன' என, பஜாஜ் புரோபைக்கிங் நிறுவனத்தின் துணை தலைவர் அமித் நந்தி தெரிவித்துள்ளார்.பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பிரபலமான "பல்சர்' மோட்டார் சைக்கிளை, 375 சி.சி. திறனில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதே போன்று, கொரியாவின் ஹியோசங் நிறுவனம், இந்தியாவின் டீ.எஸ்.கே., நிறுவனத்துடன் இணைந்து, 250 - 600 சி.சி திறனில், ஐந்து வகையான மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இவற்றுடன், ஹார்லி டேவிட்சன், டுக்காட்டி, அப்ரில்லா போன்ற சர்வதேச நிறுவனங்களின், இறக்குமதி செய்யப்பட்ட, 800 சி.சி.,க்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விற்பனை உயர்வு:இளைஞர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதால், உயர்வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை உயர்ந்து வருகிறது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 4 சதவீதம் குறைந்து, 25.20 லட்சமாக சரிவடைந்துள்ளது. இருந்த போதிலும், "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, 46 சதவீதம் உயர்ந்து, 40,852 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)