ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304  அதிகரிப்புஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
மறைமுக வரி வசூல் 4.7 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
00:50

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,நாட்டின் மறைமுக வரி வசூல், 4.7 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தொழில் துறையில் சுணக்க நிலை மற்றும் உற்பத்தி வரி வசூல் குறைவு போன்ற காரணங்களால், மறைமுக வரி வசூல் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், மறைமுக வரி வசூல், 1.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நாட்டின் மறைமுக வரி வசூல், 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த, 19 சதவீதத்தை காட்டிலும், மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.மறைமுக வரியின் கீழ்,உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 0.1 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இதையடுத்து, கணக்கீட்டு காலாண்டில், உற்பத்தி வரி வசூல், 4.9 சதவீதம் சரிவடைந்து, 37,600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், சுங்க வரி வசூல், 6.9 சதவீதம் அதிகரித்து, 40,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், சேவை வரி வசூலும், 15.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)