பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:52
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தன.நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பைவிட சிறப்பாக உள்ளது மற்றும் அமெரிக்காவில், வீடுகள் விற்பனை நல்ல அளவில் வளர்ச்சி கண்டிருக்கும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், பொறியியல், எண்ணெய், எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 9.27 புள்ளிகள் உயர்ந்து, 20,159.12 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,264.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,065.69 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, மகிந்திரா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், எல் அண்டு டி, பீ.எச்.இ.எல்., டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 2.60 புள்ளிகள் அதிகரித்து, 6,031.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,064.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,004.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|