பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
10:35
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.85 புள்ளிகள் அதிகரித்து 20263.97 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32.50 புள்ளிகள் அதிகரித்து 6064.30 புள்ளிகளோடு காணப் பட்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, எம் அண்ட் எம், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்டீஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப்பங்குள் ஏற்றத்தில் முடிந்துள்ளன. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தன.நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பைவிட சிறப்பாக உள்ளது மற்றும் அமெரிக்காவில், வீடுகள் விற்பனை நல்ல அளவில் வளர்ச்சி கண்டிருக்கும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|