பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
16:24
உலகளாவிய சேவை நிதியம் (Universal Service Obligation Fund (USOF)) வழங்க இருக்கும் ரூ.3,000 கோடியை, இந்தியாவில், மொபைல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவினைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், "நிழல் ஏரியாவில்' இருக்கும் 56 ஆயிரம் கிராமங்களில் மொபைல் இணைப்பு தர பயன்படுத்த, இந்திய தொலைதொடர்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. சேவை நிதியம் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் முடிவெடுத்து இந்த நிதியை வழங்குகிறது.
இது ஒருபுறம் இருக்க, அண்மையில் கிடைத்த தகவல்கள், வியப்பைத் தருகின்றன. கடந்த ஏப்ரல் இறுதியில், மொபைல் சேவை இணைப்பு பெற்றவர்கள், 86 கோடியே 70 லட்சம் பேராவார்கள். ஆனால், இவர்களில், ஒரே ஒரு இணைப்பு பெற்றவர்கள், மொத்தத்தில் 26 சதவீதம் மட்டுமே. இதன் பின்னர் வழங்கிய இணைப்புகளைக் கணக்கில் எடுத்தாலும், இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக இருக்கும். அதாவது, இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில், ஒரே ஒரு மொபைல் இணைப்பு சேவை பெற்றவர்கள் எண்ணிக்கை 26 கோடி மட்டுமே. 2012ல் புழக்கத்தில் இருந்த மொபைல் போன்களின் எண்ணிக்கை 22 கோடியே 16 லட்சம் ஆகும்.
கிராமப் புறங்களில், மொபைல் போன்கள் ஒருவரால் பயன்படுத்தப்படுவதுடன் நின்றுவிடுவதில்லை. இரண்டாவது நிலையில், பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களுக்கான மார்க்கட் இயங்குகிறது. இந்த வகை போன்களைப் பயன்படுத்துபவர்கள், மொபைல் வழி இன்டர்நெட் பார்ப்பதே இல்லை. அடுத்தபடியாக, மூன்றாம் நிலையிலும், பழைய போன்கள் வாங்கப்பட்டு வேறு வகையான பயன்பாட்டிற்கு, பொழுது போக்கிற்கும் கேளிக்கைகளுக்கும், கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் ஆடல், பாடல், திரைப்படம் என மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் தங்களுக்கிடையே தகவல்களை அல்லது கேளிக்கை பைல்களைப் பரிமாறிக் கொள்ள எஸ்.டி. கார்ட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|