பதிவு செய்த நாள்
24 ஜூலை2013
03:16
மும்பை:நடப்பாண்டு மே மாதத்தில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது, 12,380 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 7,880 கோடியாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிக்கும் தொகை, 57 சதவீதம் அதிகரித்து உள்ளது.கிரெடிட் கார்டுகள் வாயிலாக, பொருட்கள் வாங்கும் போக்கு, மக்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மாதந்தோறும் சராசரியாக, ஒரு கிரெடிட் கார்டு வாயிலாக, செலவழிக்கப்படும் தொகை, 4,462 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,322 ரூபாயாக உயர்ந்துள்ளது.மக்களிடையே, கிரெடிட் கார்டு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, 1.76 கோடியிலிருந்து, 1.95 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|