பதிவு செய்த நாள்
24 ஜூலை2013
03:18
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், 'சென்செக்ஸ்', 0.71 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள், வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்துவ துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 143.01 புள்ளிகள் அதிகரித்து, 20,302.13 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,351.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,249.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலிவர், பீ.எச்.இ.எல்., உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், விப்ரோ, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 46 புள்ளிகள் உயர்ந்து, 6,077.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,093.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,061.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|