பதிவு செய்த நாள்
24 ஜூலை2013
11:29
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் சரிந்து 20168.84 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 46.80 புள்ளிகள் சரிந்து 6031.00 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், "சென்செக்ஸ்', 0.71 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள், வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்துவ துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|