பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
00:35
1.14 லட்சம் "டவேரா' கார்களை பழுது நீக்கி தருகிறது ஜி.எம்.ஐ.,
புதுடில்லி:ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜி.எம்.ஐ.,) நிறுவனம், அதன் "டவேரா' கார்களில் இருந்து வெளி யேறும் கரியமில வாயு மற்றும் அதுசார்ந்த அளவீடுகளில் பிரச்னைகள் உள்ளதாக கண்டறிந்து உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு முதல், நடப்பாண்டு வரை, விற்பனை செய்த 1.14 லட்சம் "செவர்லெட் டவேரா பீ.எஸ்.3 (2.5 லிட்டர்)' மற்றும் "பீ.எஸ்.4 (2.01 லிட்டர்)' மாடல் கார்களை பழுது நீக்கித் தருவ தாக அறிவித்துள்ளது.வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் இக்கார்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்னைகள், நாடு முழுவதும் உள்ள, 280 முகமை நிறுவனங்கள் மூலம், இலவசமாகசரி செய்து தரப்படும் என, ஜி.எம்.ஐ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்புசம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல என்றும், வாடிக்கையாளர்கள், எங்கே, எப்போது கார்களை கொண்டு வருவது என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என, அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|