கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும்கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும் ... வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது -சரத் பவார் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது -சரத் பவார் ...
பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
01:02

புதுடில்லி:அனைவருக்கும் குறைந்த விலையில் பால் கிடைக்க, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தில், அமைப்பு சார்ந்த துறைகளின் பால் உற்பத்தி, 50சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர்சரத் பவார் தெரிவித்தார்.
மத்திய வேளாண் அமைச்சகமும், இந்திய தொழிலக கூட்டமைப்பும் இணைந்து டில்லியில் கருத்தரங்கை நடத்தின. இதில்சரத் பவார் பேசியதாவது:நடப்பாண்டில், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வறட்சி நிலவிய போதும்,பால் உற்பத்தி குறையவில்லை.இதனால்,சந்தையில், பால் அளிப்பு போதுமான அளவிற்கு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயும், விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும், இந்தியா, 12.80 கோடி டன் அளவிற்கு பால் உற்பத்தி செய்து,சர்வதேச அளவில், முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில், பால் வர்த்தகத்தில், அமைப்புசார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு, 30சதவீதம் என்ற அளவிலுள்ளது. இது, நடப்பு ஐந்தாண்டு திட்ட இறுதியில், 50சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.நடப்பு ஐந் தாண்டு திட்ட காலத்தில், பாலுக்கான தேவை, 15 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப் பட் டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு ,தேசிய பால் திட்டத்தில் முதற்கட்டமாக, 2,200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
நாட்டின் 75சதவீத பால் உற்பத்தியில், சிறு விவசாயிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. மொத்தம் 1.50 கோடி விவசாயிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை, 15 லட்சம் கூட்டுறவுசங்கங்கள் ஒழுங்குபடுத்தி வருகின்றன. கால்நடை தீவனங்களுக்கான பற்றாக்குறை, 36சதவீதம் என்ற அளவில் உள்ளது என, கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, தீவன அளிப்பை அதிகப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு முதற்கட்ட நடவடிக்கை களை எடுத்து வருகிறது.இவ்வாறு, பவார் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)