பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது -சரத் பவார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
01:04

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என, மத்திய வேளாண் அமைச்சர்சரத்பவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா:டில்லியில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உள்நாட்டில், வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், இதன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என, கூறப்படுகிறது. ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில்,சர்வதேசசந்தையில், இந்திய விளை பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளின் மத்தியில், இது, நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது தற்காலிகமானதுதான். வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவில் மழை பெய்து வருவதால், வெங்காயம் கொண்டு வருவதற்கானசரக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலை கூடிய விரைவில்சரியாகி, இதன் விலை குறையத் துவங்கும்.மேலும்,சந்தைகளுக்கு, புதிய வெங்காய வரத்து அதிகரிக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் இதன் விலை, படிப்படியாக குறையத் துவங்கும்.
தமிழகத்தில், இதன் உற்பத்தி குறைந்துள்ள நிலையிலும், நடப்பாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த வெங்காயம் உற்பத்தி,1.50 - 1.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, உள்நாட்டில் வெங்காயம் விலை உயர்ந்து வருவது குறித்து, அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு,சரத்பவார் கூறினார்.
நடப்பு நிதியாண்டின், முதல் மூன்று மாதக் காலத்தில் (ஏப்.,-ஜூன்), நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, 5.12 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 776 கோடி ரூபாயாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், வெங்காயம் ஏற்றுமதி, 5.17 லட்சம் டன்னாக இருந்தது.
மொத்த விலை:தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அளிப்பு இல்லாததால், இதன் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டில்லி சில்லரை விற்பனைசந்தையில், ஒரு கிலோ வெங்காயம், 35 - 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே, மிகப்பெரியசந்தையாக திகழும், மகாராஷ்டிராவில் உள்ள லசல்கான் மொத்த விலைசந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 25 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
ஏற்றுமதி:கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் ஏற்றுமதி, 2.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.86 லட்சம் கோடி ரூபாயாக காணப்பட்டது.வெங்காயத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்த, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும், இதன் ஏற்றுமதிக்கு, தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என, கோரி வந்தன.இந்நிலையில்,சரத்பவார், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில், தனக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)