நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்ததுநாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது ... ரூ.1 லட்சம் கோடி முதலீடு ரயில்வே துறை எதிர்பார்ப்பு ரூ.1 லட்சம் கோடி முதலீடு ரயில்வே துறை எதிர்பார்ப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலானஅன்னிய முதலீடு குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
13:20

புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு, 1.47 லட்சம் கோடி ரூபாயாக (2,500 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த 11 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொண்ட முதலீடு, 1,47,498 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில், ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக, 1.68 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.வெளிநாடுகளில் வசிக்கும் அதிக சொத்து கொண்ட தனிநபர் மற்றும் நிறுவனங்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்கின்றன. இதனால், நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.

அன்னிய நிதி நிறுவனங்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூன் மாதத்தில், 10.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 11.69 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 11,027 கோடி ரூபாயையும், கடன்பத்திர சந்தையிலிருந்து, 33,135 கோடி ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)