பதிவு செய்த நாள்
26 ஜூலை2013
13:20
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு, 1.47 லட்சம் கோடி ரூபாயாக (2,500 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த 11 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொண்ட முதலீடு, 1,47,498 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த மே மாதத்தில், ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக, 1.68 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.வெளிநாடுகளில் வசிக்கும் அதிக சொத்து கொண்ட தனிநபர் மற்றும் நிறுவனங்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்கின்றன. இதனால், நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.
அன்னிய நிதி நிறுவனங்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூன் மாதத்தில், 10.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 11.69 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 11,027 கோடி ரூபாயையும், கடன்பத்திர சந்தையிலிருந்து, 33,135 கோடி ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|