பதிவு செய்த நாள்
26 ஜூலை2013
13:21
கோல்கட்டா:நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், (2012-17), இந்திய ரயில்வேயில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய, கூட்டு திட்டத்தின் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளதாக, திட்டக் கமிஷனின் போக்குவரத்து ஆலோசகர் மனோஜ் சிங் தெரிவித்தார்.
கடந்த, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இந்திய ரயில்வே, பொது மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்கள் வாயிலாக, 3,000 கோடி ரூபாயை ஈர்த்து உள்ளது. இது, நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில், 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.போதிய நிதி வசதி இல்லாததால், ரயில்வே வழித்தடங்களை விரிவாக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.
இந்நிலையில், உலகத் தரத்திலான சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமானால், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய முதலீடு மிகவும் இன்றியமையாதது என, மனோஜ் சிங் மேலும் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|