பதிவு செய்த நாள்
26 ஜூலை2013
15:51
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடுகளின் விலை அதிகரிப்பால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒன்றின் விலை 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், விற்பனையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ராமநாதபுரம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே புதன்தோறும் கால்நடை சந்தை கூடுகிறது. "ஆடி' மாதத்தையொட்டி, சில நாட்களாக ஆடுகளின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏழு கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி ஆட்டுக்குட்டி 7,000த்தில் இருந்து 7,500க்கும், 12 கிலோ எடையுள்ள ஆடு 4,500த்தில் இருந்து 5000க்கும், 25 கிலோ எடையுள்ள கிடா 14 ஆயிரத்து 500ல் இருந்து 15 ஆயிரம் ரூபாய் என, விலை உயர்ந்துள்ளது. முதுகுளத்தூர் அருகேயுள்ள செல்வவிநாயகபுரத்தை சேர்ந்த ஆடு உரிமையாளர் மூர்த்தி, கூறியதாவது: "ஆடி'யில் ஆடுகளின் விலை, அதிகரிப்பது வழக்கம். பலர் ஆடுகளை அதிகம் விரும்பி வாங்குவர். நல்ல விலைக்கு விற்பதற்காக ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதில்லை. வீட்டிலேயே, தேவையான உணவு கொடுத்து வளர்ப்போம். அப்போது தான், நாம் நினைத்த விலைக்கு விற்க முடியும். கடந்த வாரம் 4000க்கு விற்ற ஆடு தற்போது 4,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆடிப்பெருக்கை ஒட்டி இன்னும் விலை அதிகரித்தாலும் ,ஆச்சர்யப்படுவதிற்கில்லை, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|