அன்னிய செலாவணி கையிருப்பு 27,920கோடி டாலராக குறைந்ததுஅன்னிய செலாவணி கையிருப்பு 27,920கோடி டாலராக குறைந்தது ... பூஞ்சை நோய் தாக்குதலால்ஏலக்காய் உற்பத்தி பாதிப்பு பூஞ்சை நோய் தாக்குதலால்ஏலக்காய் உற்பத்தி பாதிப்பு ...
தானிய உற்பத்தி அதிகரிப்பால் இறக்குமதி செலவினம் ரூ.4,350 கோடி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
03:41

நடப்பு 2013-14ம் நிதியாண்டில், மத்திய அரசின் இறக்குமதி செலவினம், 4,350 கோடி ரூபாய் (73 @காடி டாலர்) குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில், பருப்பு உள்ளிட்ட பல உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதால், அவற்றின் இறக்குமதி குறைந்து உள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசின் இறக்குமதி செலவினம், சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பருப்பு வகைகள்நடப்பாண்டு, நாட்டின் பல பகுதிகளில், பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால், உணவு தானியங்களின் உற்பத்தி, குறிப்பாக, பருப்பு வகைகளின் உற்பத்தி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி, 1.90 கோடி டன்னாக உயரும் என, மத்திய @வளாண் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. எனினும், சில தினங்களுக்கு முன்பு அமைச்சகம் வெளியிட்ட, இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி, 1.85 @காடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.பற்றாக்குறை:இந்தியாவின் மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தியில், கரீப் பருவத்தின் பங்களிப்பு, 40 Œதவீதமாகவும், எஞ்சிய பங்களிப்பை ரபி பருவமும் வழங்கி வருகின்றன.உள்நாட்டில் பருப்பு வகைகளின் உற்பத்தியை விட, அதற்கான @தவை அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், பருப்பு வகைகளின் இறக்குமதி, முந்தைய நிதியாண்டை (35 லட்சம் டன்) விட, 15 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், 40.20 லட்சம் டன்னாக உயர்ந்தது.இதே காலத்தில், பருப்பு இறக்குமதி செலவினம், 41.34 சதவீதம் உயர்ந்து, 9,448 கோடியில் இருந்து, 13,354 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 13.6 சதவீதம் சரிவடைந்ததால், இறக்குமதி செலவு அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து, இந்திய பருப்புகள் மற்றும் தானியங்கள் கூட்டமைப்பின் தலைவர் பிமல் கோத்தாரி கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. அதனால், அதன் இறக்குமதி, 13 சதவீதம் (5 லட்சம் டன்) குறையும்.
கொண்டைக்கடலை:கடந்த ஏப்ரல் முதல், பருப்பு விலை, 15 சதவீதம் குறைந்து உள்ளது. இதன் காரணமாக, பருப்பு வகைகளின் இறக்குமதி செலவினம், 25 சதவீதம் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும், பருப்பு வகைகளின் விலை, கடந்த மூன்று மாதங்களில், 15-20 சதவீதம் குறைந்துள்ளது. உதாரணமாக, கடந்த ஏப்ரலில், ஒரு குவிண்டால் கொண்டைக் கடலையின் விலை, 3,000 ரூபாயாக இருந்தது. இது, தற்@பாது, 2,700 ரூபாயாக குறைந்துள்ளது.இ@த @பான்று, ஒரு குவிண்டால் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவையும், விலை குறைந்து, தலா, 3,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்ற ஏப்ரலில், மியான்மரில் ஒரு டன் துவரம் பருப்பின் விலை, 750 டாலராக இருந்தது. இது, தற்@பாது, 125 டாலர் குறைந்து, 625 டாலராக சரிவடைந்துள்ளது.இ@த காலத்தில், ஒரு டன் உளுத்தம் பருப்பின் விலை, 650ல் இருந்து, 525 டாலராகவும், கொண்டைக்கடலையின் விலை, 570ல் இருந்து, 470 டாலராகவும் குறைந்துள்ளது. ஒரு டன் பட்டாணி விலை, 460ல் இருந்து, 400 டாலராக குறைந்துள்ளது.
மகசூல்:நாட்டில், பருப்பு வகைகளின் மகசூலை அதிகரிக்க, பல்வேறு ஆய்வுகளும், சோதனை முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தற்@பாது, ஒரு ஹெக்டேரில், 650 கிலோ பருப்பு வகைகள் உற்பத்தியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், சர்வதேச நாடுகளில், ஒரு ஹெக்டேரில், சராசரியாக, 1,800 கிலோ பருப்பு உற்பத்தியாகிறது.இந்த அளவிற்கு மக‹ல் உயரும் பட்சத்தில், இந்தியா, தானிய உற்பத்தி மூலம், பருப்பு வகைகளின் @தவையை பூர்த்தி செய்து கொள்ளும் சூழல் உருவாகும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)