பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
03:51
கொச்சி:கேரளாவில் பெய்து வரும் அதிக மழையால், ஏலக்கா# உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பூஞ்சை தாக்குதலால், இதன் உற்பத்தி, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஏலக்காய் உற்பத்தி சங்கத்தைச் சேர்ந்த தெவாசியா தெரிவித்தார்.உலகளவில், ஏலக்காய் உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டின் ஏலக்காய் உற்பத்தி, ஆண்டுக்கு, 10-12 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது.
நடப்பாண்டு, ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 24ம் @ததி வரையிலுமாக, @கரளாவில், குறிப்பாக, ஏலக்காய் அதிகளவில் உற்பத்தியாகும், இடுக்கி மாவட்டத்தில், கூடுதலாக, 59 சதவீதம் அளவிற்கு மழை பொழிவு காணப்பட்டது.இதனால், பூஞ்சை தாக்குதலால் ஏலக்காய் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறைந்தபட்சம், இரண்டு நாட்கள் வெயில் அடித்தால் தான், பூச்சி மருந்து அடிக்கமுடியும். தட்பவெப்ப நிலை மிகவும் மோசமாக இருப்பதால், விவசாயிகளால், பூச்சிமருந்து அடிக்கமுடியாத நிலை உள்ளது.
நாட்டின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில், கேரளாவின் பங்களிப்பு, 70 சதவீதமாகும். இதில், இடுக்கி மாவட்டத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏலக்காய் உற்பத்தி, 12,420 டன்னாக இருந்தது என, இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக, அதாவது, 2011-12ம் நிதியாண்டில், இதன் உற்பத்தி, மிகவும் அதிகபட்சமாக, 15 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஏலக்காய்ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 52 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 49 சதவீதமும் குறைந்திருந்தது. அவ்வாண்டில், ஏலக்காய் ஏற்றுமதி, 2,250 டன்னாக இருந்தது.
அதேசமயம், 2011-12ம் நிதியாண்டில், 4,650 டன் ஏலக்காய் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது. இதன் மதிப்பு, 363 கோடி ரூபாயாகும். @நற்று முன்தினம், இடுக்கி ஏலச் சந்தையில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, 578 ரூபாய் என்ற அளவில் விலை போனது.உற்பத்தி குறைந்ததால், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, வரலாறு காணாத அளவிற்கு, 1,950-2,000 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், ஏலக்காய் உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், முன்பேர சந்தைகளில் இதன் விலை குறைவாகவே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|