பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
04:20
புதுடில்லி:தனியார் பங்கு முதலீட்டு சந்தை வாயிலாக, இந்தியா மற்றும் சீன நாடுகள் திரட்டிய தொகை, சென்ற 2012ம் ஆண்டில், 5,200 @காடி டாலரை எட்டிஉள்ளது. எனினும், இது, இதற்கு முந்தைய ஆண்டு திரட்டிய தொகையுடன் ஒப்பிடுகையில், 13.34 சதவீதம் குறைவாகும் என, ஆய்வு நிறுவனமான டிலாய்ட் தெரிவித்துள்ளது.சென்ற ஆண்டில், சர்வதேச அளவில், நிறுவனங்கள், தனியார் பங்கு முதலீடு மூலம் நிதி திரட்டி கொள்ளும் நடவடிக்கைகள் சூடுபிடித்து காணப்பட்டன. எனினும், ஆசிய பசிபிக் பிராந்தியங்களில், இம்முறை வாயிலாக நிதி திரட்டி கொள்வதில் சுணக்கம் காணப்பட்டது.
அதேசமயம், இந்தியா மற்றும் சீனாவில் உள்ள நிறுவனங்கள், தனியார் பங்கு முதலீட்டின் வாயிலாக நிதி திரட்டி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டிஉள்ளன.சென்ற 2012ம் ஆண்டு, இரண்டாவது அரையாண்டில், (ஜூலை-டிசம்பர்), சர்வதேச அளவில், தனியார் பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக, திரட்டப்பட்ட தொகை, 17 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. இது, அவ்வாண்டின் முதல் அரையாண்டில், 16,500 கோடி டாலர் என்ற அளவிற்கே இருந்தது என, டிலாய்ட் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|