பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
04:27
கோல்கட்டா:நடப்பாண்டில், ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதக் காலத்தில், நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 25.56 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 24.87 கோடி கிலோவாக இருந்தது.உலகளவில், கறுப்பு தேயிலை உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, இலங்கை, கென்யா ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.சர்வதேசஅளவில், கணக்கீட்டு காலத்தில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 13.3 சதவீதம் அதிகரித்து, 68.67 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், கறுப்பு தேயிலைக்கான தேவை அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தையில் இதன் விலை உயர்ந்து வருகிறது.
கணக்கீட்டு காலத்தில், கென்யாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 12.80 கோடி கிலோவிலிருந்து, 19.51 கோடி கிலோவாகவும், இலங்கையில் இதன் உற்பத்தி, 13.76 கோடி கிலோவிலிருந்து, 14.89 கோடி கிலோவாகவும் அதிகரித்துள்ளது.இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், நடப்பாண்டில், சர்வதேச அளவில், இதன் உற்பத்தி, 220 கோடி கிலோவாக அதிகரிக்கும். கடந்த 2012ம் ஆண்டில், உலகளவில் இதன் உற்பத்தி, 208 கோடி கிலோவாக இருந்தது.இந்தியாவில் கறுப்பு தேயிலை ஏலத்தில், இதன் விலை (ஒரு கிலோ) 28.92 ரூபாய் உயர்ந்து, 146.52க்கு விற்பனையானது. கென்யாவின் ஒரு கி@லா கறுப்பு தேயிலை, 1.37 ரூபாய் உயர்ந்து, 155.60க்கும், இலங்கையின் கறுப்பு தேயிலை, 15.83 ரூபாய் உயர்ந்து, 189.74க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|