பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
14:57
நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் (என்எம்ஐபிஎல்) தமது வாகன ஏற்றுமதி வசதிக்காக இன்று எண்ணூர் போர்ட் லிமிடெட் (இபிஎல்) நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துக் கொண்டது. மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு.ஜி.கே.வாசன் மற்றும் நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியும், நிசான் இந்தியா செயல்பாடுகளுக்கான தலைவருமான திரு.கெனிசிரோ யோமுரா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 60ஆயிரம் கார்கள் ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யும் உறுதிப்பாட்டுடன் முதல் 15 நாட்களுக்கு இலவச பார்கிங் இடம், துறைமுகத்தில் ஆட்டோ மொபைல் யூனிட்டுகளை கையாள்வதில் முன்னுரிமை மற்றும் 0.36 சதவிகிதம் என்ற கட்டணத்தில் வார் பேஜ் கட்டண சலுகை போன்றவைகள் கிடைக்கின்றன. மேலும் இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.கெனிச்சிரே யோமுரா, ""இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரகடம் தொழிற்சாலையை உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கான யுக்திபூர்வமான தொகுப்பாக மாற்றவேண்டும் என்ற எங்கள் கண்ணோட்டம் முழுமை அடைந்து ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது என்று கூறினார். கடந்த 2008ஆம் ஆண்டு தனது வாகனங்களை பல்வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எண்ணூர் துறைமுகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்ட நிசான் 2010 முதல் ஏற்றுமதியை தொடங்கி 2 ஆண்டுகளில் 2 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. சென்னை அடுத்த ஒரகடத்தில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.45 மில்லியன் முதலீட்டில் உற்பத்தி வசதியை நிசான் அமைத்துள்ளது. இது அலையன்ஸ் குளோபல் மேனுபாக்சரிங் முறைகள் மற்றும் தர நிர்ணயங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|