பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
01:54
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 88 ரூபாய் உயர்ந்து, 21,072 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஒன்றரை மாதங்களுக்கு பின், ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும், 21 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,623 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,984 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,055 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 2,634 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 88 ரூபாய் அதிகரித்து, 21,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 120 ரூபாய் உயர்ந்து, 28,175 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த மாதம், 19ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 2,626 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,008 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் பிறகு, குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று மீண்டும், சவரனுக்கு, 21 ஆயிரம் ரூபாயை தாண்டியது.நேற்று, ஒரு கிராம் வெள்ளி, 43.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,955 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|