பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
01:57
புதுடில்லி:வரும், 2016-17ம் நிதிஆண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி திறனை, 3.30கோடி டன்னாக அதிகரிக்க, குறைந்தபட்சம், 40 ஆயிரம்கோடி ரூபாய்தேவை என, உரங்கள் துறைக் குழு தெரிவித்துள்ளது.மத்திய திட்டக்குழு, நடப்பு 12வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்தின் கீழ், உரங்கள் துறை செயலர் தலைமையில், செயல்பாட்டுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.பற்றாக்குறை:இக்குழு அளித்துள்ள அறிக்கை விவரம்:நாட்டின் யூரியா உற்பத்தி, 2.20கோடி டன்னாக உள்ளது.
அதே சமயம், யூரியாவிற்கானதேவை, 3.20கோடி டன்னாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க, உரத் துறையில் அதிக முதலீடுதேவைப்படுகிறது. கடந்த 70' களிலும், 90'களிலும், உரத்துறையில் அதிக அளவில் முதலீடுமேற்கொள்ளப்பட்டது. ஆனால், 10 மற்றும் 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், உரத்துறையில்மேற்கொள்ளப்பட்ட முதலீடு மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த 2010-11ம் நிதிஆண்டின் இறுதி நிலவரப்படி, உரத்துறையில், 27,247கோடி ரூபாய்அளவிற்கே முதலீடுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப, இதர துறைகளில், முதலீட்டின் மீதான வருவாய்அதிகரித்து உள்ளது. ஆனால், உரத் துறையில், முதலீட்டின் மீதான வருவாய், மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், உரத் துறை, புதிய முதலீடுகளை ஈர்க்கத் தவறி விட்டது.வரும், 2016-17ம் நிதிஆண்டிற்குள், நாட்டின் யூரியா உற்பத்தி திறனை, 1.20கோடி டன் அதிகரித்து, 3.37கோடி டன்னாக உயர்த்தவேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 40 ஆயிரம்கோடி ரூபாய்தேவைப்படும்.
அதிக அளவில் எரிவாயு வளம் உள்ள நாடுகளுடன், கூட்டு திட்டங்கள் மூலம், இந்த இலக்கை எட்ட முயற்சிமேற்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.புதிய முதலீடு:இதனிடையே, மத்திய அரசு, யூரியா முதலீட்டு கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, உரத்துறையில் புதிய முதலீடுகளைமேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.உரத் தொழிற்சாலை அமைக்க அல்லது விரிவாக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு, முதலீட்டின் மீது, வரிக்கு பின், 12 சதவீத வருவாய்கிடைக்கவும், வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|