நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கிநாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி ... டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு ...
யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
01:57

புதுடில்லி:வரும், 2016-17ம் நிதிஆண்டில், நாட்டின் யூரியா உற்பத்தி திறனை, 3.30கோடி டன்னாக அதிகரிக்க, குறைந்தபட்சம், 40 ஆயிரம்கோடி ரூபாய்தேவை என, உரங்கள் துறைக் குழு தெரிவித்துள்ளது.மத்திய திட்டக்குழு, நடப்பு 12வது ஐந்தாண்டு (2012-17) திட்டத்தின் கீழ், உரங்கள் துறை செயலர் தலைமையில், செயல்பாட்டுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.பற்றாக்குறை:இக்குழு அளித்துள்ள அறிக்கை விவரம்:நாட்டின் யூரியா உற்பத்தி, 2.20கோடி டன்னாக உள்ளது.
அதே சமயம், யூரியாவிற்கானதேவை, 3.20கோடி டன்னாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க, உரத் துறையில் அதிக முதலீடுதேவைப்படுகிறது. கடந்த 70' களிலும், 90'களிலும், உரத்துறையில் அதிக அளவில் முதலீடுமேற்கொள்ளப்பட்டது. ஆனால், 10 மற்றும் 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், உரத்துறையில்மேற்கொள்ளப்பட்ட முதலீடு மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த 2010-11ம் நிதிஆண்டின் இறுதி நிலவரப்படி, உரத்துறையில், 27,247கோடி ரூபாய்அளவிற்கே முதலீடுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப, இதர துறைகளில், முதலீட்டின் மீதான வருவாய்அதிகரித்து உள்ளது. ஆனால், உரத் துறையில், முதலீட்டின் மீதான வருவாய், மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், உரத் துறை, புதிய முதலீடுகளை ஈர்க்கத் தவறி விட்டது.வரும், 2016-17ம் நிதிஆண்டிற்குள், நாட்டின் யூரியா உற்பத்தி திறனை, 1.20கோடி டன் அதிகரித்து, 3.37கோடி டன்னாக உயர்த்தவேண்டும். இதற்கு, குறைந்தபட்சம், 40 ஆயிரம்கோடி ரூபாய்தேவைப்படும்.
அதிக அளவில் எரிவாயு வளம் உள்ள நாடுகளுடன், கூட்டு திட்டங்கள் மூலம், இந்த இலக்கை எட்ட முயற்சிமேற்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.புதிய முதலீடு:இதனிடையே, மத்திய அரசு, யூரியா முதலீட்டு கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, உரத்துறையில் புதிய முதலீடுகளைமேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.உரத் தொழிற்சாலை அமைக்க அல்லது விரிவாக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு, முதலீட்டின் மீது, வரிக்கு பின், 12 சதவீத வருவாய்கிடைக்கவும், வகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)