யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவையூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை ... டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.18,500 கோடி விலக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
01:58

புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் 26ம் தேதி வரையிலுமாக, இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் இருந்து, 18,500 கோடி ரூபாயை (300 கோடி டாலர்) திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளன.
பங்குச்சந்தை:டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவது மற்றும் அமெரிக்காவின் புதிய நிதி கொள்கை போன்றவற்றால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டுள்ள முதலீட்டில் இருந்து, அதிக அளவு தொகையை திரும்பப் பெற்றுள்ளதாக "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கண்ட மொத்த தொகையில், 12,081 கோடி ரூபாயை கடன்பத்திரங்களில் இருந்தும், 6,394 கோடி ரூபாயை நிறுவனப் பங்குகளில் இருந்தும் விலக்கிக் கொண்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டில் இருந்து, 44,162 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் இருந்து, இதுவரையிலுமாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 13 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாயின் மதிப்பு, 59.04 ஆக இருந்தது.ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதக் காலத்தில் (ஜன., -மே) கடன்பத்திர முதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்ததால், இந்நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
பங்கு முதலீடு:நடப்பு ஆண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் கடன் பத்திர முதலீட்டில் இருந்து, நிகர அளவில், 21,169 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டுள்ளன.அதே சமயம், இதே காலத்தில் இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு நிகர அளவில் 65,785 கோடியாக உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்போதைய, நிலவரப்படி இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,756 ஆக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)