பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
01:59
புதுடில்லி: "செபி' யின் விதிமுறைகளை பின்பற்றும்நோக்கில், நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு முதலீடுமேற்கொள்ள, தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.பொதுத் துறை நிறுவனங்களில், பொதுமக்களின் பங்கு முதலீடு, குறைந்தபட்சம், 10 சதவீதம் இருக்கவேண்டும் என, "செபி' தெரிவித்துள்ளது. இதற்கான கெடு முடிவடைய, இன்னும் 10 நாட்கள் உள்ளன.இதற்குள், நலிவுற்ற ஏழு பொதுத்துறை நிறுவனங்களில், தலா 10 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யவேண்டும்.
இதையொட்டி, மத்திய நிதி அமைச்சகம், தனி நிதியம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. சொத்து நிர்வாக நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த நிதியம், நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கும்.இதன்படி, ஸ்கூட்டர்ஸ் இந்தியா, எச்.எம்.டி., ஆன்ட்ரூ யூல், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், ஐ.டி.ஐ., பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர், இந்துஸ்தான்போட்டோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம், 90 சதவீதமாக குறைக்கப்படவேண்டும்.
தனி நிதியம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த பின்னர், பங்கு விற்பனை திட்டம்மேற்கொள்ளப்படும்.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 40 ஆயிரம்கோடி ரூபாய்திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுவரை, 800கோடி ரூபாய்மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|