யூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவையூரியா உற்பத்தி இலக்கை எட்ட ரூ.40,000 கோடிதேவை ... டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புமேலும் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நலிந்த பொது துறை நிறுவனங்களின்பங்கு முதலீட்டிற்கு தனி நிதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
01:59

புதுடில்லி: "செபி' யின் விதிமுறைகளை பின்பற்றும்நோக்கில், நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு முதலீடுமேற்கொள்ள, தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.பொதுத் துறை நிறுவனங்களில், பொதுமக்களின் பங்கு முதலீடு, குறைந்தபட்சம், 10 சதவீதம் இருக்கவேண்டும் என, "செபி' தெரிவித்துள்ளது. இதற்கான கெடு முடிவடைய, இன்னும் 10 நாட்கள் உள்ளன.இதற்குள், நலிவுற்ற ஏழு பொதுத்துறை நிறுவனங்களில், தலா 10 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யவேண்டும்.
இதையொட்டி, மத்திய நிதி அமைச்சகம், தனி நிதியம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. சொத்து நிர்வாக நிறுவனத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த நிதியம், நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கும்.இதன்படி, ஸ்கூட்டர்ஸ் இந்தியா, எச்.எம்.டி., ஆன்ட்ரூ யூல், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், ஐ.டி.ஐ., பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர், இந்துஸ்தான்போட்டோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம், 90 சதவீதமாக குறைக்கப்படவேண்டும்.
தனி நிதியம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த பின்னர், பங்கு விற்பனை திட்டம்மேற்கொள்ளப்படும்.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 40 ஆயிரம்கோடி ரூபாய்திரட்ட திட்டமிட்டுள்ளது. இதுவரை, 800கோடி ரூபாய்மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)