பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
02:01
புதுடில்லி:நடப்பாண்டு, நாட்டின் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவை (ஐடெஸ்) துறையில், 1.20 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மெரிட் டிராக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.வளாகத்தேர்வு:இதன் தலைவர் (ஐ.சி.பீ. பிரிவு) ராஜீவ்மேனன் கூறும்போது,"கடந்த ஆண்டு, வழக்கத்தை விட,வளாகத்தேர்வில் பணிக்கு ஆட்களை எடுப்பது குறைந்துள்ளது. நடப்பாண்டும், இதே நிலைதான் நீடிக்கும். 1.20 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும்' என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, ஐ.டி., துறையைசேர்ந்த முன்னணி நிறுவனங்கள், வளாகத்தேர்வு மூலம் பணியாளர்களைதேர்வு செய்து வந்தன. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு முதல், இந்நிறுவனங்கள், பொருளாதார மாற்றங்களுக்கும், வர்த்தக சூழலுக்கும் ஏற்ப, அவற்றின் நிலைப் பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ளத் துவங்கின.இதனால், வளாகத்தேர்வு மூலம் பணியாளர்களைதேர்ந்தெடுப்பது குறைந்து விட்டது, என, அவர்மேலும் கூறினார்.கடந்த ஆண்டு, ஐ.டி. துறையில், 1.80 லட்சம் பட்டதாரிகள்வேலைக்குசேர்ந்தனர்.
நடப்பாண்டு, இதில், 30 சதவீதம் குறையும் என்று தெரிகிறது.நடப்பாண்டு, ஐ.டி., துறை, 12 - 14 சதவீதம் வளர்ச்சி காணும் என, நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது.வருவாய்:இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சார்ந்தே உள்ளது. இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய்சரிவடைந்தது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|