பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
10:33
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.17 புள்ளிகள் சரிந்து 19614.45 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.40 புள்ளிகள் சரிந்து 5839.05 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க வர்த்தக தினமானநேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள நிதி ஆய்வுக் கொள்கையின் சாதக, பாதக அம்சங்களை எதிர்நோக்கி, முதலீட்டாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.இதனால், தொடர்ந்து நான்கு வர்த்தக தினங்களாக, இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. எனினும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|