பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
11:55
மும்பை : வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றார். அதேசமயம் 2014-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 5.7 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் கவலை அளிப்பதாகவும் அதை தவிர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு நிறுவனங்களின் அச்சுறுத்தலால் தான் பொருளாதாரம் நிலையற்ற தன்மையாக இருப்பதாகவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|