பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
01:30
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 1.79 சதவீதம் சரிவடைந்து, 60.49 ஆக வீழ்ச்சி கண்டது. இது, நேற்று முன்தினம், 59.42 ஆக இருந்தது.நிதி கொள்கை:ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான முக்கிய வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. ரூபாய் மதிப்பின் சரிவை தடுப்பதற்கான அறிவிப்புகளும் காணப்படவில்லை.
மேலும், வெளிவிவகாரப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, நிதிக் கொள்கைகளை, உருவாக்க வேண்டிய, இக்கட்டான ‹ழலில் சிக்கியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.அதாவது, தடையற்ற முதலீடுகள், நிலையான செலாவணி மதிப்பு, சுதந்திரமான நிதிக் கொள்கைகள் ஆகியவை இல்லாத சூழல் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ‹சகமாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, இனி ரூபாய் மதிப்பை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை என்ற கருத்தில், வங்கிகளும், எண்ணெய் நிறுவனங்களும், டாலரை வாங்கத் துவங்கின.இதையடுத்து,அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 1.06 குறைந்து, 60.49 ஆக காணப்பட்டது. இது கடந்த மூன்று வாரங்களில் காணப்படாத சரிவாகும்.நடப்பு ஜூலை, 8ம் தேதி, ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 61.21 ஆக, வீழ்ச்சி கண்டது.இதையடுத்து, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால், கடந்த வாரம்,26ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு, 58.70 வரை உயர்ந்தது.
பற்றாக்குறை:இந்நிலையில், தற்போது மீண்டும் ரூபாய் மதிப்பு, 60 ஐ தாண்டியுள்ளது.இதனிடையே, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன், "நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கவும், வரும் நாட்களில் மத்திய அரசு, புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|