ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அதிகரிப்புஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அதிகரிப்பு ... அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறை தளர்த்தப்படும் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறை தளர்த்தப்படும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இரும்பு தாது இறக்குமதி அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
23:55

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது இறக்குமதி, அதிகரிக்கும் என, இந்திய சுரங்க தொழில் கூட்டமைப்பு (எப்.ஐ.எம்.ஐ.,) தெரிவித்துள்ளது.
அதிக வரி விதிப்பு மற்றும் நாட்டின் பல மாநிலங்களில், ”ரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றால், உள்நாட்டில், இரும்பு தாது உற்பத்தி சரிவடைந்துள்ளது. சென்ற 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது உற்பத்தி, 21.80 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 11.50 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டது. இதற்கு, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில், இரும்பு தாது வெட்டியெடுப்பதற்கு, விதிக்கப்பட்ட தடையே முக்கிய காரணமாகும்.
உற்பத்தி குறைந்ததையடுத்து, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 10 கோடி டன்னாக இருந்த நாட்டின் இரும்பு தாது ஏற்றுமதி, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 1.80 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டது.இது, நடப்பு நிதியாண்டில், மேலும்சரிவடைந்து, 1 கோடி டன்னாக குறையும்.
அதேசமயம், சென்ற நிதியாண்டில், 30 லட்சம் டன் என்ற அளவில் இருந்த இரும்பு தாது கட்டிகள் மற்றும் கற்களின் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில், 2-2.40 கோடி டன் என்ற அளவில் அதிகரிக்கும் என, எப்.ஐ.எம்.ஐ., தலைவர் எச்.சி. டாகா தெரிவித்தார்.கடந்த மூன்று நிதியாண்டுகளில், இரும்பு தாது ஏற்றுமதி மூலம், 2,670 கோடி டாலர் அன்னிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது என, எப்.ஐ.எம்.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)