பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
23:55
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது இறக்குமதி, அதிகரிக்கும் என, இந்திய சுரங்க தொழில் கூட்டமைப்பு (எப்.ஐ.எம்.ஐ.,) தெரிவித்துள்ளது.
அதிக வரி விதிப்பு மற்றும் நாட்டின் பல மாநிலங்களில், ”ரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றால், உள்நாட்டில், இரும்பு தாது உற்பத்தி சரிவடைந்துள்ளது. சென்ற 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது உற்பத்தி, 21.80 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 11.50 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டது. இதற்கு, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில், இரும்பு தாது வெட்டியெடுப்பதற்கு, விதிக்கப்பட்ட தடையே முக்கிய காரணமாகும்.
உற்பத்தி குறைந்ததையடுத்து, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 10 கோடி டன்னாக இருந்த நாட்டின் இரும்பு தாது ஏற்றுமதி, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 1.80 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டது.இது, நடப்பு நிதியாண்டில், மேலும்சரிவடைந்து, 1 கோடி டன்னாக குறையும்.
அதேசமயம், சென்ற நிதியாண்டில், 30 லட்சம் டன் என்ற அளவில் இருந்த இரும்பு தாது கட்டிகள் மற்றும் கற்களின் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில், 2-2.40 கோடி டன் என்ற அளவில் அதிகரிக்கும் என, எப்.ஐ.எம்.ஐ., தலைவர் எச்.சி. டாகா தெரிவித்தார்.கடந்த மூன்று நிதியாண்டுகளில், இரும்பு தாது ஏற்றுமதி மூலம், 2,670 கோடி டாலர் அன்னிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது என, எப்.ஐ.எம்.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|