பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
23:58
புதுடில்லி:நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஜன.,-ஜூன்), 46சதவீதம்சரிவடைந்துள்ளது என, குஷ்மன் அண்டு வேக்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளால், வீடு மற்றும் அலுவலகங்களுக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது. இதன் காரணமாக, புதிய கட்டுமான திட்டங்களில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது.இதனை பிரதிபலிக்கும் விதமாக, மதிப்பீட்டு காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப் பட்ட தனியார் பங்கு முதலீடு, 46சதவீதம்சரிவடைந்து, 27.60 கோடி டாலராக குறைந்துள்ளது.
மேலும், இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும், 13ஆக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 19ஆக உயர்ந்து காணப்பட்டது.கணக்கீட்டு காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில், அதிகளவில் தனியார் பங்கு முதலீட்டை (13.16 கோடி டாலர்) ஈர்த்ததில், புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, மும்பை (6.75 கோடி டாலர்), என்.சி.ஆர்., (3.88 கோடி டாலர்), பெங்களூரு (1.69 கோடி டாலர்) ஆகிய நகரங்கள் உள்ளன. இதே காலத்தில், அலுவலகம்சார்ந்த பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தனியார் பங்கு முதலீடும், 11.81 கோடி டாலர் என்ற அளவில் குறைந்து உள்ளது என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|