பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:21

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவுஅடைந்தன.
அதேசமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய், எரிவாயு, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 28.51 புள்ளிகள் சரிவடைந்து, 19,317.19 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,569.20 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,170.46 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., மகிந்திரா, கோல் இந்தியா உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், எச்.டீ.எப்.சி பேங்க், இந்துஸ்தான் யூனிலிவர், கெயில் உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 14.15 புள்ளிகள் குறைந்து, 5,727.85 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,808.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,676.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|