முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு ... தொடர்ந்து சரிகிறது ரூபாயின் மதிப்பு : ரூ.60.70 தொடர்ந்து சரிகிறது ரூபாயின் மதிப்பு : ரூ.60.70 ...
நடப்பு கரீப் பருவ நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2013
00:23

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (ஜூன்-அக்.,), முந்தைய சாதனையை முறியடிக்கும் விதத்தில் நாட்டின் நெல் உற்பத்தி இருக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
பருவமழை:டில்லியில், அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பல மாநிலங்களில் பருவ மழை நன்கு பெய்து வருவதால், நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. பல மாநிலங்களில் உணவு தானியங்களின் உற்பத்தி உயர்ந்துள்ளதாக,தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், நடப்பு கரீப் பருவத்தில், நாடு, நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-12ம் நிதிஆண்டின், கரீப் பருவத்தில், உணவு தானியங்களின் உற்பத்தி, சாதனை அளவாக 13.12 கோடி டன்னை எட்டியது. இதே காலத்தில், நெல் உற்பத்தியும், 9.27 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டது.ஆனால், கடந்த 2012-13ம் ஆண்டு, கரீப் பருவத்தில், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வறட்சி காரணமாக, உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்தது.
ஆனால், நடப்பு கரீப் பருவத்தில், சென்ற வார நிலவரப்படி, நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களின் சாகுபடி பரப்பளவு, 17.70 சதவீதம் உயர்ந்து, 747.78 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதில், நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு 8.58 சதவீதம் உயர்ந்து, 196.38 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்:கடந்த வார நிலவரப்படி, நாடு முழுவதும், 21 சதவீதம் கூடுதலாக மழை பொழிந்து உள்ளது. முன்கூட்டிய மழையால், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவும், 90 சதவீதம் அதிகரித்து, 73.62 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதே போன்று, இதர தானியங்களின் சாகுபடி பரப்பளவும், 117.48 லட்சத்தில் இருந்து, 148.82 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)