தொழிலகங்கள் மூடப்பட்டதால்...சென்னையில்வேலைவாய்ப்பு 21 சதவீதம் குறைந்ததுதொழிலகங்கள் மூடப்பட்டதால்...சென்னையில்வேலைவாய்ப்பு 21 சதவீதம் குறைந்தது ... சர்க்கரை விலை உயரும் "இக்ரா' மதிப்பீடு  சர்க்கரை விலை உயரும் "இக்ரா' மதிப்பீடு ...
தேயிலை தூள் ஏல விற்பனையில் மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
01:25

குன்னூர்:தேயிலை தூள் கொள்முதலில், வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாததால் குன்னூர் ஏல மையங்களில், அதன் விற்பனை சரிந்து வருகிறது; இதனால் 50 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்து உள்ளது.
குன்னூர் அரசு தேயிலை ஏல மையத்தில், 31வது ஏலம் நடந்தது. இதில், மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரத்து 930 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. இதில், 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 கிலோ இலை ரகமும், 2 லட்சத்து 73 ஆயிரத்து 951 கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும். மொத்தமுள்ள 5.35 லட்சம் கிலோவில் 50 சதவீதம் மட்டுமே விற்பனையானது. அனைத்து ரகங்களிலும் 2 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது. சென்ற வார நிலவரப்படி இலை ரகத்தில்,சாதாரணரகம்70முதல்75 ரூபாய் வரையிலும், உயர்ரகம்75முதல்110 ரூபாய் வரையிலும், டஸ்ட் ரகத்தில் சாதாரணரகம்80முதல்85 ரூபாய் வரையிலும், உயர்ரகம் 95 முதல் 103 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது.
குன்னூரில் ஏல மையங்களில் கடந்த சில வாரங்களாக சுமார் 30 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்து வருகிறது. இது, தற்போது, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேயிலையின் தரம் குறைந்துள்ளதால் வெளிநாட்டு வர்த்தகர்கள் தேயிலையை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேயிலை தூள் தேக்கமடைந்து வருகிறது.
இந்நிலையில், குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருவதால், தேயிலை வரத்து குறைய துவங்கியுள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை விலை, கிலோவுக்கு 50 பைசா வரை குறைந்துள்ளது. ஒரு கிலோ, சாதாரண ரக பசுந்தேயிலைக்கு 16 ரூபாயும், நடுத்தர தேயிலைக்கு, 19 ரூபாயும், உயர் ரகத்துக்கு, 22 ரூபாய்என்ற அளவிலும், விலை கிடைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)