பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:25
குன்னூர்:தேயிலை தூள் கொள்முதலில், வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாததால் குன்னூர் ஏல மையங்களில், அதன் விற்பனை சரிந்து வருகிறது; இதனால் 50 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்து உள்ளது.
குன்னூர் அரசு தேயிலை ஏல மையத்தில், 31வது ஏலம் நடந்தது. இதில், மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரத்து 930 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. இதில், 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 கிலோ இலை ரகமும், 2 லட்சத்து 73 ஆயிரத்து 951 கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும். மொத்தமுள்ள 5.35 லட்சம் கிலோவில் 50 சதவீதம் மட்டுமே விற்பனையானது. அனைத்து ரகங்களிலும் 2 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது. சென்ற வார நிலவரப்படி இலை ரகத்தில்,சாதாரணரகம்70முதல்75 ரூபாய் வரையிலும், உயர்ரகம்75முதல்110 ரூபாய் வரையிலும், டஸ்ட் ரகத்தில் சாதாரணரகம்80முதல்85 ரூபாய் வரையிலும், உயர்ரகம் 95 முதல் 103 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது.
குன்னூரில் ஏல மையங்களில் கடந்த சில வாரங்களாக சுமார் 30 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்து வருகிறது. இது, தற்போது, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேயிலையின் தரம் குறைந்துள்ளதால் வெளிநாட்டு வர்த்தகர்கள் தேயிலையை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேயிலை தூள் தேக்கமடைந்து வருகிறது.
இந்நிலையில், குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருவதால், தேயிலை வரத்து குறைய துவங்கியுள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை விலை, கிலோவுக்கு 50 பைசா வரை குறைந்துள்ளது. ஒரு கிலோ, சாதாரண ரக பசுந்தேயிலைக்கு 16 ரூபாயும், நடுத்தர தேயிலைக்கு, 19 ரூபாயும், உயர் ரகத்துக்கு, 22 ரூபாய்என்ற அளவிலும், விலை கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|