பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:42
புதுடில்லி:நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மத்திய ஜவுளி அமைச்சகம், ஏற்றுமதியாளர்களை கேட்டு கொண்டு உள்ளது.
கடந்த நிதியாண்டில் (2012-13), நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதனை, அடுத்த மூன்று ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு உயர்த்த வேண்டும் என, மத்திய ஜவுளி அமைச்சர்சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதிக்கு முக்கியசந்தைகளாக திகழ்கின்றன.
மேற்கண்ட நாடுகளில், ஏற்பட்டுள்ள பொருளாதாரசுணக்க நிலையால், இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், லத்தீன், அமெரிக்கா, சீனா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு இவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம், மேற் கண்ட நாடுகளில் கைவினை பொருட்கள் அதிகளவில் கிடைக்கும் வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து தரும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.தற்போது, நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி துறையில், 10 லட்சம் பேர் பணிபுரிகின்ற னர். கைவினை பொருட்களின் முக்கிய மையங்களாக, மொரதாபாத், ஜெய்ப்பூர்,சஹரன்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்கள் திகழ்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|