பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:44
சென்னை:சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னியச் செலாவணியில் மேற்கொள்ளும், குறித்த கால டெபாசிட்டுகளுக்கான (எப்.சி.என்.ஆர்.,) வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
இதன்படி, டாலரில் மேற்கொள்ளும்,1-2 ஆண்டுகளுக்குள்ளான குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 2.69 சதவீதத்திலிருந்து, 2.67சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதே போன்று, 2-3 ஆண்டுகளுக்கிடையிலான டெபா சிட்டுகளுக்கான வட்டி, 2.50சதவீதத்திலிருந்து, 2.48சதவீதமாகவும், 4 - 5 ஆண்டு டெபாசிட்டிற் கான வட்டி, 4.18சதவீதத் திலிருந்து, 4.17சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.அதேசமயம், ஐந்து ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி, 4.56சதவீத மாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முன், 4.51சதவீதமாக இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|